chat

Thursday, October 25, 2012

கவிச்சோலை - 25-அக்டோபர் -2012


25-அக்டோபர் -2012 அன்று நமது கலகலப்பு அரட்டையறையில் வலி என்ற தலைப்பில் நண்பர்களின் கவிதை சிதறல்கள்.





SEMMOZHI THAMIZHAN :

பெண் இனத்தின் பிரசவமே பெரிய வலி என்பார் இந்த பாரிலே.

பார் அழித்த பிரசவம் ஒன்றை நீர் அறிவீரோ ?

பத்து மாத கர்பத்தை, பத்தாம் மாதம் அழித்தால், அதனினும் கொடிய வலி உண்டோ இந்த உலகிலே ?

முப்பது ஆண்டு கற்பத்தை முழுமையாக அழித்த அரும் செயல் அறிவீரோ ?

அது ஈழமென்னும் குழந்தையின் ஈன்றளை, இறுதி தருணத்தில் அழித்த இனிமை செய்தியாய் படித்தீரோ ?

அதை வலி என்பதா ? அல்லது அழித்தொரின் வலிமை என்பதா ?

அழிக்கப்பட்ட அக்குழந்தையின் தாய், அருமை தமிழ் என்பதை அறிவீரோ ?

அவளின் அழுகுரலைத் தான் கேட்டீரோ ?

அரும் பெரும் பிரசவத்தை அனுபவித்த பெண் என்றால்.

அரை நிமிடம் ஆழ்ந்து சிந்தித்து பாருங்கள், அத்தமிழ்த் தாயின் அழிக்கப்பட்ட ஈழமென்னும் கர்பத்தை, அழித்த தருணம் எத்தனை வலி மிகுந்த கொடிதென்று.

வலி. வலிமையானவர்களால் வழங்கப்படும் வண்ணமிகு பரிசு.

அவ்வண்ணம் சிவப்பென்றால், அது கலைக்கப்பட்ட கற்பத்தின் குருதியே அன்றி வேறில்லை.

======================================================


RULES POOCHANDI :

சுகமானது
வலியுடனே துவங்கும்.
மானுட பிறவி
வலியின் துணையுடனேயே
முடியும்.
வெற்றியென்னும் சிலை
செதுக்க வலிமையெனும்
உளி வேண்டும்.
வலியென்னும்
விழிகொண்டே உளியை நாம்
அடைவோம். 
ஏனெனில்
வலிமையென்னும்
சொல்லினுள்ளேயே
புதைந்து இருக்கும்
வலி.
வலியே வெற்றிக்கான
பிரதான வழி..

ஆம் -  வலி சுகமானதுதான்!!

======================================================

RAAJJ :

தலைப்பு வலி தான்..!
ஆனால் வலி என்ற வார்த்தை இல்லாமல்..
உணர்ந்த வரிகள் இவை ..!

நேசமும் இப்போது நன்கொடை ஆகிவிட்டது..
தேவைப்படுபவர்களை விட கொடுப்பவர்கள் குறைந்துவிட்டதால்

ஊற்றெடுக்கும் அன்பிலும் ஊழல் கலந்துவிட்டது
இதயத்தில் ரத்தம் பாய்ச்சும் நாளங்களில் ஈரம் உலர்ந்துவிட்டதால்.

மனிதப்பிறப்புகள் இன்று அறுவை சிகிச்சையில் நிகழ்வதால்

காயப்படுத்தி பார்க்கும் எண்ணம் சிலரில் மதிப்பு கூடிவிட்டதால்
மனித நேயத்தின் விலை இன்று மலிந்துவிட்டது.

கேட்கும் திறன் கொண்ட காதுகளும்
நோக்கும் வல்லமை படைத்த கண்களும்
தங்கள் பணியை செவ்வனே செய்கையில்
அன்பு செலுத்தும் இதயம் மட்டும் குருதி பாய்ச்சும் ஒரு
கருவியாக சுருங்கிவிட்டதேன் ?

உன் மனதை
சக மனிதனிடம் நேசம் வளர்க்கும் ஆயுதமாய்
வக்கிரங்களை வடிகட்டும் ஒரு கேடையமாய்
பார்க்க இயலாத மனிதா
நீ எப்போது மனிதனாவாய் ?

======================================================

ANBUSELVI AKKA :

மனதைப் புரிந்து கொள்ளாமல்
மௌனம் சாதிப்பது..
சொற்களைப் பேசியே
மனதை நொறுக்குவது..
செயல்களால் புறக்கணிப்பது..
சேர்ந்திருந்தே துன்பம் அளிப்பது..
அலட்சியத்தால் நம்மை அழவைப்பது..
நட்புக்கரம் நீட்டி பின் வேறுபட்டு
புரிதலின்றி விலகுவது..
நேசித்த பெண்ணை ஏமாற்றுவது
காதலித்தவனை வஞ்சிப்பது...
இவையெல்லாம்
ஆறாத வடுவைக்கொடுக்கும்
வலிகள்..!!

சில பேர்
நமக்கு தலைவலி..
பல பேரின் செய்கைகள்
நமக்கு நெஞ்சுவலி..
வியாபாரத்தில் நட்டம்
நண்பர்கள் ஏமாற்றுதல்..
திருமணமானபின் பெற்றோரைப்
புறக்கணிக்கும் மகன்..
மாப்பிள்ளை இரக்கமின்றி கேட்கும்
வரதட்சணை..
ஒரே மகளாகப் பிறந்து
திருமணத்தால் பெற்றோரைப்
பராமரிக்க இயலாத   மகள்..
இப்படி ஆயிரம் வலிகள்
நம் அன்றாட வாழ்க்கையில்...!!

குழந்தைப்பெற்றின் போது
அம்மா பெரும் வலி..
அவள் குழந்தையை
உச்சி முகரும் போது..
இன்ப வலியாக மாறும்...
இது நாம்  காணும் உண்மை

ரணம் ஏற்பட்டால்
வலியும் ஏற்படும்..
ரணம் வெளியில் தெரியாத,
சொல்ல இயலாத வலிகளும் உண்டு
வலிகளுக்கு மருந்து  ஒன்றே ஒன்றுதான்
அன்பென்னும் மந்திரம்..
அது நன்று...

நன்று தான்...!!

======================================================

NEW_DUST :

செழித்த மனதுடன் படகு எடுத்து.,
விரிந்த கடலில் களிப்புடன் செலுத்தி.,
தீர்க்க வேண்டிய கடன்களை எல்லாம்
தீர்த்து முடித்த கனவுகளோடு.,
பார்த்து பார்த்து இடம் தேடி.,
அயல் ராணுவம் பார்வை பட்டு.,
வேண்டிய அளவு அடி கொடுத்து.,
வீசி பிடித்த மீன்களை எல்லாம்..,
கொட்டி தீர்த்து,  வலைகளை அறுத்து.,
கரைக்கு வந்து சேர்ந்தால்..,
உடம்பு வலிப்பது சிலநாள்..!!
குடும்ப உள்ளங்கள் வலிப்பது பலநாள் !!

======================================================

PATTAASU :

நீ பிரிந்த பொழுது
இல்லாதது,
நீ அருகிலிருந்தும் பேசாத
பொழுதினில்....


வலி..!

======================================================

KARTHIS :

விளைநிலங்களில்
புற்றீசலாய் முளைக்கும் - புதுகட்டிடங்கள்

நீரோடைகளில்
வண்ணவிஷங்களாய்  கலக்கும் - கழிவுகள்

காற்றுமண்டலத்தில்
கரும்புகையாய் கலக்கும் - விஷவாயுக்கள்

விஞ்ஞானம் காட்டும் ஒவ்வொரு வழியும்
பூமித்தாய்க்கு வலிதான்.

======================================================

ROWTHIRAN :

ஒவ்வொரு வலியும்
ஒன்றை ஈன்றெடுக்கிறது ..!

தாயின் வலியில்..
குழந்தை ..!

கவிஞனின் வலியில்..
கவிதை ..!

======================================================

DAVDASS :

"காதல்" ஒரு சுகமான வலி ..!

======================================================

MULLAI :

உன்னை பார்க்கும்போது புரியவில்லை...
பார்க்காதபோது ஏங்குகிறேன் - வலி
பாடலை கேட்கும்போது சுகம்
பாடும்போது உணருகிறேன் - வலி
செலவு செய்யும் பொது புரியவில்லை
உழைக்கும்போது தெரிகிறது - வலி
குழந்தையாய் இருக்கும்போது தெரியவில்லை
குழந்தையை சுமக்கும்போது உணருகிறேன்...

வலி..!

======================================================

RAMYA :

வளி (காற்று )இல்லாமல் உலகம் இல்லை ..
வலி இல்லாமல் வாழ்கையும்  இல்லை ..
உடல் காயத்தால் உருவாகும் வலி
காலத்தால் மறைந்து விடும்
ஆனால் உள்ளத்தில் உருவாகும் வலி
மறைந்துவிடாமல் நம்மை  மெருகேற்றி
வாழ்க்கையின் உச்சத்தில் நம்மை
ஏற்றிவிடும்...வலியை தாங்கும்
இதயம் மட்டுமே வாழ்வில் வெற்றியை
எட்டிப்பிடிக்கும்....வலியை உணர்பவன்
நிச்சயம் வாழ்க்கையை உணருவான் ....

======================================================

NISHAA :

அடிபட்ட  வலியை விட ..
ஆழ்மனதின் வலி..வித்தியாசமானது..

அன்று ஒரு நாள் உன் கரம் பிடித்து ,
வாழ்கை பாதையிலே,
வானத்தை பார்த்து ,பறக்கலாம்...
என்ற ஆசையோடு ,என்னுடைய
காதலை சொன்னேன்..

ஆனால் நீ ...!
சிறிது காலம் போகட்டும் என்றாய் ..

நீ சொல்வாயோ ..? மாட்டாயோ ..??
என்று ஒவ்வொரு நிமிடமும்..
இதயத்தில் ஒருவிதமான
வலியை வைத்துக்கொண்டு
காத்திருக்கிறேன் ..

புற்றுநோய் எவ்வாறு நுரையிரலை அரித்து
மரணத்தை சம்பவிக்குமோ ..
அதுபோல் இந்த ஆனந்தமான வலி
என் இதயத்தை அரித்துக்கொண்டு இருக்கிறது ..

அது எனக்கு மரணத்தை சம்பவிக்கும் முன் ..
உன் மனதை தந்து காப்பாற்று ..
இல்லையென்றால் என் கல்லறையில்
" நான் உன் காதலன் " என்று எழுது ..

இறந்தும் வலியுடன் துடித்துக்கொண்டிருக்கும்
அந்த இதயத்திற்கு ஒரு அமைதி கொடுத்து
கருணை கொலை செய்துவிடு ..
அந்த இதயம் வலி இல்லாமல் உறங்கட்டும்..!

         இப்படிக்கு...

---ஒரு இதயத்தின் வலி -----

======================================================

SANTHYA :

என் கைகளில்
முட்கள் குத்திய போது கூட
எனக்கு வலிக்கவில்லை
ஆனால் அவன் என் கைகளை
உதறி விட்டு
என் தங்கையுடன்
சென்ற போது வலித்துது-----!

என் இதயம்-----!

======================================================

DEEPIKA KARTHIKEYAN :

குழந்தை ஈன்றெடுக்கும் போது
வரும் வலியைத்தான்
மிகவும் மகிழ்ச்சியுடன்
ஏற்று கொள்வாள்..

தாய் ..!

======================================================

BABITHA (VIA ANBU AKKA) :

வலியும் சுகமாய் ஆனது இங்கே...
புது வரவின் இன்பம் கண்டு..
மலர் பாதம் மண்ணில் பட,
இதழ் கண் புது உலகம் காண
பட்டு மேனி என்னைத் தொட
புதுப் பார்வை என்மேல் பட
புத்துணர்வில் நானும் திளைக்க
நீ பிறக்கும் இன்பம் காண,
பிரசவ வலியும் எனக்கு..

ஒரு சுகமே..!

======================================================

NIRMALA  (VIA ANBU AKKA) :

உறவுகள் விலகும் போது உணர்வில் வலி..
உதடுகள் புன்னகைக்க மறுக்கும்போது உடம்பில் வலி..
கல்லடி பட்ட காயத்தில் புல்லறுக்கும் போது வலி..
சொல்லடி பட்ட  சோகத்தில் ஆறாரணங்களும்  வலி...

புண் பட்ட நெஞ்சில் புதிர் போடும் போது வலி...
புதிதாய் ஒன்றைக் கற்காமல் போனால் ஒவ்வொன்றும் வலி..
யாருமற்ற தீவில் ஒற்றை ஆளாய் வாழும் போது வலி...
யாசகம் கேட்கும் பிஞ்சுக் குழந்தையின் நெஞ்சமெல்லாம் வலி...

நேசிக்க யாருமில்லா நேரத்திலும் வலி...
வாசிக்க வழியில்லாத போதும் வலி...
பேசும் வார்த்தை பிறழும் போதும் வலி...
ஏசும் இரக்கமற்ற சில மனிதர்களாலும் வலி...

ஓசையற்ற ஓரிடத்தில் உழல்வதாலும் வலி...
காசில்லா மனிதனுக்கு வாழ்க்கையெல்லாம் வலி...
வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை...
வலியை வென்றால் நீ  உலகின் ஒளி ..!

======================================================

FROM FACEBOOK MRS. JAYASRI RAMESH :

வலியுடனே விடிந்து,
வலியுடனே நகர்ந்து,
வலியுடனே முடிகிறது..

வாழ்க்கை..!

======================================================



KANCHANASUGI :

காதல் என்பது ஒரு சுகமான வலி ..!
ஆனால் அந்த வலியே..
எனக்கு ரணமாய் மாறினால் ..
உன்னை நான்
குற்றம் சொல்ல முடியுமா..?


கண்ணா ....

======================================================

ARUNESH :

1) வலியின் வலிகளை வலிமையாக
    சொல்லும் ஆயுதம் ..
    வளமான வரிகளை உடைய
    கவிதைகளே ..!

2) வழியில் தோன்றும் வலியும்
    இனிமை சேர்க்கின்றது..
    என்னவளே..!

    உனை தேடிவருகையில் …

======================================================

AIRTEL :

காதலித்து பார் கவிதை வரும் என்று சொன்னவர்கள் ,
ஏன் கண்ணீர் வரும் என்பதை சொல்லவில்லை ..

ரோஜாசெடியில் தான் முட்கள் உண்டு ..
ஆனால் இங்கு ரோஜா இதழிலும் முட்கள் உண்டு
என் இதயத்தில் இன்றும் வலிக்குதடி ..

அவள் என் பிணத்தை பார்க்க வருவாள் என்று தெரிந்திருந்தால்
நான் சாகும் போது கூட என் கண்களை மூடி இருக்க மாட்டேன்

என் உயிரை விட்டு இருந்தால் ஒரு நொடி வலி தான் , ஆனால் நீ என்னை விட்டு சென்றதால் ஒவ்வொரு நொடியும் வலி ..

======================================================

NAAN EE :

புண்பட்ட மனதில் புகைபோடும் வலி...!

======================================================

SHANA_BABY :

பூமிக்கும் பிரபஞ்சத்திற்கும் இடையே
நீல வெள்ளியில்..
நம் காதல் நீந்தி செல்கிறது .

நீர் குமிழியாய்
நீ வந்து வந்து என்னை
மோதி செல்கிறாய் ...

எதையும் நான் தொடுவதாய் இல்லை
தொட்டால் நீ வெடித்து விடுவாய்

தூரத்திலே ரசிக்கிறேன்
உரசல்களை நேசிக்கிறேன்

அன்பே இந்த சந்தோஷ
நிமிடத்தில் உன்னில் நான்
கரைகிறேன்...

நிரந்தரமான இடம் இல்லை என்று சொல்லி
என்னை விட்டு சென்றாய் நீ ..
என் இதயம் தான் நிரந்தரமான இடம்
என்று ஏன் நீ உணர மறந்தாய்...!

No comments:

Post a Comment