chat

Thursday, December 6, 2012

கவிச்சோலை - 06 -டிசம்பர் -2012

06 -டிசம்பர் -2012 அன்று நமது கலகலப்பு அரட்டையறையில் கனவு என்ற தலைப்பில் நண்பர்களின் கவிதை சிதறல்கள்




PATTAASU :

கனவும் அழகு..!

அருமையான கனவில்,
அழகான
கவிதையாக
நீ வருவதால்,
தூக்கமும்
பிடித்துப்போனது.

கனவின் மீதும்
காதல்
ஏற்படுகிறது
எனக்கு.

நிஜத்தில் என்னை
காக்க வைத்த
நீ,
கனவில்
எனக்காக
காத்து நிற்கிறாய்

எத்தனை அழகு கனவு

மழை நின்ற பின்
விமானத்தில் ஏறி
நின்று
வானவில்லில்
வர்ணம் பூசி
மகிழ்கிறேன் நான்.

கடல் நீர்
இத்தனை சுவையா
இளநீர்
போல இனிக்கிறதே
கனவு கலந்த இனிப்பா?

மணல் வெளியிலும்
பசுமை
தோட்டங்கள்
காணும் என்
கண்கள் குளிர்கிறது

பாலையில் பூத்திருக்கும்
மலர்களை
நான் கொய்கிறேன்
என்னவளுக்காக

பண்டம் மாற்றி கொள்ளும்
சங்ககாலமும்
கனவில் அரங்கேறிய
மாயம் என்ன

சாகாவரம் என்பது
இதுதானா
கற்காலம் துவங்கி
அரசர் காலம் வாழ்ந்து
இன்றைய அரசியல்வாதிகள்
காலம் வரை
பார்த்துவிட்டேன்.

எந்த நாட்டிற்கும்
இடையே
எல்லை கோடுகளே
இல்லை

அனைத்தையும் அழித்த
பெருமை என் கனவிற்கே

ஆம் கனவு அழகு தான்...!

======================================================

ANBUSELVI AKKA :

கனவு காண்போம் வாருங்கள்..!!!

நனவில் சந்தித்த நல்ல நிகழ்ச்சிகளை
நனவிலிமனத்தில் பதியவைக்கும் அறிவியல் ஆச்சரியம்
நிகழ்த்த முடியாத கற்பனைக் காட்சிகளையும்
அனுபவித்து மகிழ வைக்கும் அற்புத செயல்பாடு..

வாழ்க்கை லட்சியங்களைக் கனவாகக் கண்டால் தான்
சாதனைகள் நனவாகும் நாட்களும் கைகூடும்
கனவு காணத் தெரியாதோரை
காலம் பின்தள்ளி முன்செல்லும்
கனவில் இனிமை எனில்
காலமெல்லாம் மகிழும் நாம்
துயரங்கள் கனவில் வந்தால்..
நல்லவேளை இது கனவு தானே என்று
கடவுளுக்கு நன்றி சொல்லி
நிம்மதிப்பெருமூச்சு கொள்வோம்..!

கண்மூடி கனவுகாண்
நினைத்த பெண்ணைக் காதலித்து,மணம்  புரிந்து
மக்கட்செல்வமும் பெற்று மகிழ்வாக வாழ்வதுபோல்
கனவு வரும் மனம் மகிழும்
கண் திறந்து கொண்டே கனவு காண்பவரும் உண்டு
பகற் கனவு பலிக்காது என்ற பழமொழியும் பாரில் உண்டு
விண்வெளியில் பறப்பதுபோல்,
வெள்ளை யானை தெரிவதுபோல்,
கப்பலில் செல்வதுபோல் நம் விருப்பமே கனவாகும்..

கனவுக்கு பலன் சொல்லி காசு பார்ப்போரும் உண்டு
எண்ணங்களின் பதிவுகள் தான் கனவு என்போரும் உண்டு
கண் மூடி கனவு காண்பது மனித இயல்பு
கண் திறந்து கனவு காண்போரும் உலகில் உண்டு
பகல் கனவு பலிக்காது என்றொரு பழமொழியும் பாரில் உண்டு
எண்ணக் கனவுகள் எளிதாக ஈடேற ,
வண்ணக் கனவுகள் வாழ்வில் இடம் பெற ,
நிம்மதியான உறக்கம் கொண்டு
கனவு காண்போம் வாருங்கள்....!!!

======================================================

RULESPUCHANDI :

கனவு தொழிற்சாலை..!

பணம் படைத்தவரை
பரமஏழை
முந்திச்செல்லும் ஒரே
தொழிற்சாலை!
சோம்பேறிகளுக்கு
சொர்க்கத்தின் வாசலை
கடக்க
இறைவன் அளித்த இலவச
அனுமதி சீட்டு!!

---------------------------------------------------

கனவு தான் நிலையானதோ!

அன்று கனவில் காதலி  :
கனவே இனித்தது!
கனவு பலித்தது  :  காதலி
மனைவியானால்!!
என்றும் இளமையாய்
இனிமையாய்
குளுமையை இருக்கும்
கனவு மட்டுமே
நிலையானதோ!!!!

======================================================

SRUTHI :

கனவு நிஜமாக !!!

தூக்கத்தில் வருவதுமட்டுமல்ல கனவு
துக்கத்தை துரத்துவதும் கனவே !!
கனவு கலையாமல் இருந்தால் சுகம்
கனவு நிஜமானால்  சொர்க்கம் !!
கனவு நிஜமாக விடவேண்டியது தூக்கம்
தூங்கி கனவில் திளைக்காமல்
கற்பனயில் மிதக்காமல் !!
தன்னம்ம்பிகையுடன் முயலுங்கள்
கனவு உங்கள் கண்முன்னே  நிஜமாக !!!!

======================================================

NEW_DUST :

கனவில் மட்டுமே நீ மிகவும் கனிவு !!

என் கருப்பு வெள்ளை கனவுகளை,
வண்ணமயமாக்கியவள் நீ..!!
உறங்க நினைக்காத நான்,
கனவுகளில் உன்னை காண..,
கிடைத்த நேரங்களில்
இப்பொழுது எல்லாம்,
உறங்க நினைக்கிறேன் !!!
காரணம்,
கனவில் மட்டுமே நீ மிகவும் கனிவு !!

======================================================

MULLAI :

பிரதான தலைப்பு செய்திகள்..!

தமிழ் நாட்டில் 24 மணி நேரம் மின் உபயோகம்..
இலங்கையில் தமிழ் ஈழம் பிரகடனப்படுத்தல்..
முதலமைச்சர் பதவி விலகல்..
இலவச வீடுகள் பகிர்ந்தளிப்பு..
தமிழில் மட்டுமே தமிழ் மக்கள் பேசவேண்டும்..
தமிழ் திரைப்படங்களில் ஆடல் பாடல் தணிக்கை.
T . ராஜேந்தர் பேசாமடந்தயானர்...
ரிங் ரிங் ரிங் ரிங் ரிங் ...
அலாரம் கனவு ...

======================================================

KARTHIS :

மின்சார "கனவு"-

தூக்கத்தில் கனவு வந்தது - அந்தகாலம்
தூக்கமே கனவாகிப் போனது - இந்தக்காலம்

======================================================

ROWTHIRAN :

கருப்பு வெள்ளை ஓவியம்..!

என்றோ ஒருநாள் தொலைத்த உன் முகத்தை
இன்றும் நான் கண்டு ரசிக்கும்
கருப்பு வெள்ளை ஓவியம்
நான் காணும் கனவு ..!

---------------------------------------------------

கனவென்னும் ஏணி ..!

வாழ்வினில் கனவென்பது வெற்றிக்கு வித்திடும் ஏணி ..!
அதை வீட்டு கூரையில் போடாதே..!
விண்ணில் போடு ..! எட்டாவிடினும்
முயன்றோம் என்ற பெருமை கிட்டும் ..

======================================================

SANTHYA :

கனவே நீ கலையாதே..!

கனவில் இனிக்க இனிக்க
என்னோடு பேசியவள்
காலையில் எங்கு சென்றாலோ!
அவளை தேடிப்பார்த்தேன்..
கிடைக்கவில்லை..
அழுத்துப் போய் இரவில் படுத்த எனக்கு..
தூக்கத்தில் மீண்டும் வந்தால்
என்னவள்..என்னைத்தேடி..!
இனியும் அவளை விட்டு
பிரிய மணம் இல்லை.
ஆகையால், கனவே நீ கலையாதே..!

======================================================

LAVANYA :

கனவு கலையாத  வாழ்வு வேண்டும்..!

தென்றலால்  துவழாத கொடியும்...
தேயாத வெண்ணிலவும்...
காயாத ஈரமும்...
கலையாத மேகமும்.....
நிமிர்வான நேர்மையும்....
சரித்திர வீரமும்.....
விடியாத காலையும்....
நினைவுகள் தாலாட்ட...
கனவு கலையாத  வாழ்வு வேண்டும்!

======================================================

KANCHANASUGI :

என் கனவில் பார்ப்பேன்..!

கலகலப்பு நண்பர்களை
எப்பொழுது சந்திப்பேன் என்று தெரியாது
ஆனால் தினமும் என் கனவில் பார்ப்பேன்
என்று ஆசைபடுகிறேன்..!

-----------------------------------------------------

பேச வார்த்தை இல்லையே..!

கனவில் காண்பது அனைத்தும்,
உண்மை ஆகாது என்று தெரியும்..
ஆனால்...
உன்னை என் கனவில் சந்தித்தேன்,
நேரில் பார்ப்பேனா ...? என்று ஏங்கினேன்..
இறுதியில் உன்னை நேரிலும் சந்தித்தேன்
ஆனால் ..
பேச வார்த்தை இல்லையே..!

-----------------------------------------------------

கனவிலும் கூட கிடைக்காது ..!

ஆயிரம் என்ன ..
கோடி கனவுகள் காணலாம் ..
ஆனால் உண்மையான இந்த நட்பு
கனவிலும் கூட கிடைக்காது ..!

======================================================

MAHEE :

கனவு கண்டேன்..!

தாய் கட்டி தழுவினாள்..
கன்னத்தில் முத்தமிட்டாள்..
எனக்கு நிதம் சோறு ஊட்டினால்..
என்ன தாலாட்டி தூங்க வைத்தாள்..
இது எல்லாம் வெறும் கனவு தான்..!

அம்மா...!
நீ எப்பொழுது நிஜமாய் வருவாய்..
என்னை கட்டி தழுவ....!
இன்னும் கனவு கண்டுகொண்டுதான் இருக்கிறேன்...

======================================================

SANGEETSK_7 :

ஒரு புதிய சகாப்தத்தின் துவக்கம்..!!!!

எல்லாரும் கனவு காண்பார்கள்..!
சிலர் இரவில் ...
சிலர் பகலில் ...
இரவில் காணும் கனவோ..
விடியலின் ஸ்பரிசத்தில் கரைந்து போகிறது.
பகலில் காணும் கனவோ
கண்சிமிட்டும் நேரத்தில் மாயமாகிறது..!

இதில் எதை நம்புவது..?
எதில் அர்த்தம் உள்ளது ..??
ஆராய துவங்கினால்..
பித்து பிடித்தவள் என்றார்கள் ..

கனவு காண்பது...சரியா..? தவறா ..?
புதிரானதா ..? முரண்பாடா..??
கற்பனையில் தோன்றும் சிந்தனையா..?
இல்லை புறமனத்தின் விளக்கமா..??

எதுவாக இருந்தாலும்
அதை கவிதையில் ஒதுக்காமல்..
நிறைவேற்றும் பாதையில்...
 நாம் அனைவரும் செல்வோம்..

கனவுகள் நனவாகும் காலம் ..அது
ஒரு புதிய சகாப்தத்தின் துவக்கம்..!!!!

======================================================

ARUNESH :

சுவடுகள்..!

சுற்றும் உலகை ,
சுட்டும் விழியினில்
சுருக்கி வைக்கும்
சுவடுகள் - கனவு ..!

---------------------------------------------------

ஏணியாய்..! 

எட்ட முடியா உயரங்களை
எட்டிப்பிடிக்கும் ஏணியாய்
எந்தன் கனவுகள் ..!

======================================================

BABITHA (VIA ANBU AKKA)

கனவோ என மருண்டேன்..!!!

மருத்துவன் ஆனேன்,
உயிர் காத்து சேவை செய்தேன் ..!

பொறியாளர் ஆனேன்
நல்ல பல கட்டிடங்கள் நாட்டிற்குத் தந்தேன்..!

வழக்கறிஞர் ஆனேன்,
நீதி தேவதையின் வாக்கைக் காத்தேன்..!

ஆசிரியர் ஆனேன்,
நல்ல மாணவரை நித்தம் மதிப்பெண்ணுடன் உருவாக்கினேன்..!

பிரதமராய் ஆனேன்,
நாட்டு மக்களுக்கு நன்மை செய்தேன்..!

இத்தனையும் செய்த நானோ,
டுடோரியல் கல்லூரியில் மாணவனாய்
கையில் குறைவான மதிப்பெண்ணுடன்
தேர்ச்சி பெறாதவனாய்..
கனவோ என மருண்டேன்
கண்கள் கலங்கியபடி...!

======================================================

U_CANT_C_ME :

உழைக்க சொல்வதே கனவு ..!!

உறங்கும் போது வருவது இல்லை கனவு ..!
உன்னை உறங்க விடாமல் உழைக்க சொல்வதே கனவு ..!!

======================================================

TEAM VIEWER : 

உண்மை சம்பவம் ..! 

கனவு கண்டேன் சூரியன் இல்லை என்று ,
கண்விழித்து பார்த்தாலும் சூரியன் இல்லை ,
உண்மை சம்பவம் ..!

======================================================

FATHIMA HASSAN : :

புகைப்படம்...!

மனம் வெளிப்படுத்தும் ரகசிய புகைப்படம்
பழைய புதிய நினைவுகளை புதுப்பிக்கும் தளம்
ரகசியங்கள் ரசிக்கப்பட்டும் ,
அந்தரங்கங்கள் வெளிப்பட்டும்,
மனம் என்னும் புகைப்பட கருவி
எடுக்கும் புகைப்படம்...!
கற்பனை + ரகசியங்கள் = கனவு ..

======================================================

MAHI BASKY :

கனவுலகம்..!

மனிதர்கள் இல்லாமல் கனவில்லை..!
கனவுகள் இல்லாமல் மனிதர்கள் இல்லை..!
கனவுகள் உருவாக்காத மனிதர்கள் இல்லை..!
மனிதர்கள் உருவாக்காத கனவுகளும்  இல்லை..
இவ்வுலகில் மனிதன் வாழ தேவை கனவுகள்..
கனவுகள் வாழ தேவை மனிதர்கள்..
இதுதான் நமது கனவுலகம்..!

======================================================

TAMILGIRL :

கனவென்னும் மாயக்கண்ணாடி..!

கனவு என்பது நொடியில் கண்டு ,
நிமிடங்களில் யோசித்து ,
ஆயுள் வரை போராடுகின்ற
ஓர் மாயக்கண்ணாடி..!

அதில் சிலர்,
அந்த மாயக்கண்ணாடியை அடைகின்றனர்,
இன்னும் சிலர் உடைகின்றனர்..
பலர் அதை அடையாமல் அழுகின்றனர் ..!

======================================================

VENKET PMV :

நான் உன்னைக் காதலிக்கிறேன்.......!

உருவம் இல்லாத ஒருவனாக மாறி
உன் வீட்டுக்குள் நுழைந்து
நாள் முழுவதும்
நீ செய்வதை எல்லாம்
நான் பார்த்து ரசிப்பதைப் போல
கனவில் உன்னைக்
கண்டு ரசிக்கிறேன்
தினமும்,,,,
இந்தக் கனவுகள் எல்லாம்
சொல்வது
ஒன்றே ஒன்று தான்
தூக்கத்திலும்
நான் உன்னைக் காதலிக்கிறேன்.......

======================================================

SHAKI :

கனவிலும் சுமக்கிறேன்....!

பிஞ்சு விரல்களை பஞ்சாய் விரித்து.
பட்டாடை உடுத்தி பாதத்தில் தண்டை அணிந்து..
அவள் நடந்தால் நோகும் என..... பூவை தெளித்து
அதன் மேல் பாதம் நோக நடக்க
அவள் நடையின் சிலம்பொலி சிணுங்களில்
கண் விழித்து பார்த்தேன் என் செல்ல பெண்
அவள் துயில் கொண்டிருந்தால் நான் கண்டது.......
கனவா இல்லை!!!!!!!
என்னை ஈன்றவலை
கனவிலும் சுமக்கிறேன்....!

======================================================

CRIMINAL :

கனவு..!

நான் மகிழ்ச்சியாக வாழும் உலகம் கனவு
நானே படிக்கும் என் வாழ்க்கை கனவு
காதல் துளிர் விடும் முதல் நிலை கனவு

======================================================

RIYA : 

கனவில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...!!

கனவு..!
அதில் தினமும் நீ வருவாய் என்ற நினைவு..!
நாள் முழுவதும் உன்னருகில் நான் இருந்தாலும்,
கனநேரம் கூட உன்னை பிரியா மனமின்றி,
உறக்கத்தில் உனைகான விரும்புகிறேன்..

ஒவ்வொரு நொடியும் உன்னுடன் இருந்தநேரங்களில்
என் வாழ்கையின் அற்புதமான நிமிடங்கள் என்று நினைத்தேன்..
ஆனால் காலை விடியல் என் உறக்கத்தை நிறுத்த,
எங்கே என் கனவில் இருக்கும் நீஉம் உன் நினைவுகளும்,
கலைந்துவிடுமோ ..? என்று இன்னும்
உன்னுடன் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...!!

======================================================

SACHIN :

என் கனவு தேவதைக்கு ஓர் கற்பனை கவிதை ..!

உன்னை பற்றி ஆயிரம் சொல்லலாம்
என் கனவு தேவதையே ..

நான் உறங்கும் போது
நீ பூக்கின்றாய் எனக்குள் ...

நீ வருவதால் தானோ
என் விழிகள் உன்னை காண துடிக்கிறது..

கனவில் வரும் என் தேவதையே ..
கனவு தேவதையே ..

உன்னை நான் கற்பனையில் நினைத்து
எழுதும் எழுத்துக்கள் தான் ஏராளம் ..!

ஓ.. மானுடனே...!

சோர்ந்து கிடக்கும்
உன்னை தட்டி எழுப்ப
இதோ வந்துவிட்டேன்..

பொங்கும் இளமையுடன்
உன் வாழ்வில் பூபாளம் இசைக்க ..

இதோ ..புத்தம் புது மலராய்
பிறந்து விட்டேன் ..
உனக்கோர்  அறிய வாய்ப்பு
விழித்தெழு மானிடா..!
படைத்திடு மானிடா ..!!
ஓர் புதிய உலகை ..!

1 comment:

  1. அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள்..

    ReplyDelete