chat

Thursday, November 22, 2012

கவிச்சோலை - 22 -நவம்பர் -2012


22 -நவம்பர்  -2012 அன்று நமது கலகலப்பு அரட்டையறையில் தூக்கம் என்ற தலைப்பில் நண்பர்களின் கவிதை சிதறல்கள்..


PATTAASU :

விடியும் வரை
காத்திருக்க வேண்டாம்
கனவிலேயே உன்னை
சந்திப்பேன்.

இரவு வணக்கங்கள்....

-------------------------------------------------------

கனவில் நான் வந்து
உன் தூக்கத்தை
தொலைக்க விரும்பவில்லை
விடியும் வரை
காத்திருக்கிறேன்

இரவு வணக்கம்....

-------------------------------------------------------
ஆஹா.......

என் கனவில்
நீ
வந்து
என்னை
துயிலேழுப்பினாய்.

நடுநிசியில் ஒன்றும்
புரியாமல்
முகபுத்தகத்தை
நாடினேன்
காலம் கடத்த....

-------------------------------------------------------

நீ இல்லாத
இரவு
நரகமாய்
இருக்கிறது,
நடுநிசியிலும்
என் நினைவு
உன் கனவில் வெளிப்படும்,
நான் பரவசம் அடைய.....

-------------------------------------------------------

நாம் கைக்கோர்த்து
நடந்த
பகல் பொழுது
வினாடிகளை,
மிகைப்படுத்தி
காட்டும்
கனவுகள்
மெய்ப்படட்டும்

இரவு வணக்கங்கள் ...

-------------------------------------------------------

கனவும் உன்னைப்போலவே
அழகு தான்
உன்னை அதில் காணும் பொழுது..

-------------------------------------------------------

அன்பே,
விடியலை தடுத்திரு.
பகலவனை உறங்கச்சொல்.
தாமதமாக உதிக்கச்சொல்.
கனவெல்லாம் நீயே.........

-------------------------------------------------------

சூரியனின்
தூரிகை ஏன்
விடியச்செய்கிறது
அதுவும்
கறுப்பு வண்ணம்
அடித்ததால்
எத்தனை சுகமாய் இருக்கும்?

-------------------------------------------------------

பகலவனே
சிறிது நேரம் காத்திரு.
என்னவளின் கனவு
மிச்சம் இருக்கு.

-------------------------------------------------------

கனவில் நான் வந்து
உன் தூக்கத்தை
திருட விரும்பவில்லை
விடியும் வரை
காத்திருக்கிறேன்....
உறங்காமலே...
விழியின் ஊடே
உன் உள்ளதை நோக்கி பயணிக்க.....

-------------------------------------------------------

உன்னை பற்றிய
நினைவுகள்,
என் சிந்தைனையை
ஆட்கொண்ட
பொழுதினில்,
கண்களை திறந்து
கொண்டு
கற்பனை தூக்கம்

உலகையே மறந்து....

======================================================

ANBUSELVI AKKA :

உழைத்துக் களைத்தவர்களின் ஓய்வு அமைதி,
மனசாட்சியற்ற  மனிதர்களின் தினசரி கவலை,
வயதான மூத்தோரின் நிம்மதிப் பெருமூச்சு,
வாலிப விடலைகளின் கண்திறந்த கனவு,

நனவில் நிகழ விரும்புகின்ற நல்ல ஆசைகளை ,
அனுபவித்து மகிழ ஆண்டவன் கொடுத்த வரம்,
ஓயாமல் உழைக்கின்ற உறுப்புக்களுக்கு ஓய்வு,
எப்போதும் உழைப்பே  உயிர்மூச்சாய்க் கொண்ட தலைவர்களின்
வாழ்வில் சிறு பகுதியாய மாறிவிட்ட வழக்கம்

மழலைகளின்  வாழ்வில் அடிகடி வரும் செயல்
முதியோர் ஆன பின் வாராத  நிலை
தினம்தினம் வந்துபோகும் பொய்மையான சாக்காடு
குழந்தையாய்க்  கண் திறந்து மண்ணுலகில் வாழ்ந்து
கடமைகளை நிறைவேற்றி காலத்தோடு காலமாக மாறும்
மீளாத் தூக்கமாம் இறப்பு   நம்மைத் தழுவும் வரை
துணிவுடன் செயலாற்றி சிறப்பாக வாழ்வோம்...! வாருங்கள்..!!


======================================================

RULESPUCHANDI :

மனிதன் உயிருடன் இருக்கும் போதே காணும் சொர்க்கம்
அளவாய் இருக்கும் போது  வரம்
அதிகமானால் வரும் துயரம்
சோகத்தையும் சோர்வையும் சொர்ப்பநேரம்
தள்ளிவைக்க ஓர் தாய்மடி
நிரந்தர தூக்கத்தை நோக்கி
நடைபோடும் நமக்கு
தினமும் ஒரு ஒத்திகை...!

-------------------------------------------------------

நித்திரையிலே
நிம்மதியை தேடாதே
நிம்மதியாய்
நித்திரைக்கு போ
நிம்மதி நிரந்தரமாய்
நின்னை சரணடையும்

======================================================

NEW_DUST :

என் விழிகளில் நான் காணாத,
உன்னை பற்றிய காட்சிகளை,
மூடிய எனது இமைகளை திரையாக்கி,
ஒளியும் ஒலியுமாய் ஒட்டிகாட்டும்,
காண கிடைக்காத கனவுகளை.,
உண்டாக்க வல்ல தூக்கம் மட்டுமே,
எனது ஆயுளை நீடிக்க செய்யும் மந்திரம் !!

======================================================

ROWTHIRAN :

தேக்குமரத் தொட்டிலிலே
சந்தனத் தைலமிட்டு
பனிக்குளிர் காற்றை பரவவிட்டு
பணக்கார வீட்டுப் குழந்தையை
பதமாக தொட்டிலாட்டினாலும்
தூங்குவதற்கு நேரம் பிடிக்கிறது
இந்த பாழும் நகரத்திலே…

வேப்பமர நிழலினிலே
ஒரு சேலை முடிச்சிற்குள்
தூளி கட்டி போட்ட
பாட்டாளியின் குழந்தை...
தன் தாயின் வாசத்தை
சேலையில் சுவாசித்தபடி
சுகமாய் தூங்கிப்போகிறது
நான் வாழும் கிராமத்திலே…!

======================================================

MULLAI :

எத்தனை பேச்சுக்கள்
எத்தனை சிரிப்புகள்
சில நிமிட அழுகைகள்
பல் நிமிட அரவணைப்புகள்
போர்க்களம் சென்றாலும்
நேரம் போவதே தெரியாமல்
தொலைபேசியில் உரையாடல்கள்
போரும் முடிந்தது பதிலும் வந்தது
நீ இவ்வுலகில் இல்லை என்பது செய்தி
என்னிதயத்தில் நீ இன்னும் தூக்கம்
நான் தூங்க மாட்டேன் - ஏன் தெரியுமா
உன்னை தாலாட்ட...ஆராரோ நான் யாரோ???

======================================================

KARTHIS :

துக்கத்தை மறக்க வைக்கும்
மருந்து -  தூக்கம்

======================================================

SRUTHI :

கனவுக்கோட்டையின்
வாழ்விடம்  தூக்கம் !
லட்சியக் கனவைக்
கலைத்திடும்  தூக்கம் !!
கனவு என்னும் சிற்றின்ப
சொர்க்கம் தூக்கம் !!!
லட்சியப் பேரின்பத்தை
கலைக்கும் தூக்கம் !!
நிம்மதியை தருவதும் தூக்கம் !
தற்காலிக இறப்பும் தூக்கம் !
சோம்பேறிகளை சுண்டி
இழுக்கும் தூக்கம் !

தூக்கம் என்பது
சோர்வுக்கு மருந்து ...
அளவோடு இருந்தால்
அதுவே வாழ்க்கைக்கு விருந்து...!

======================================================

SANGEETSK_7 :

கஷ்டப்பட்டு வேலை செயும்போது வரும் தூக்கம்
அந்த தூக்கத்தை மதிக்காமல் முழித்து இருந்தால்
வந்து சேரும் மற்றவர்களுக்கு துக்கம் ..!

======================================================

SANTHYA :

நிரந்தரமாக தூங்குபவரை கூட
எழுப்பி விடலாம் ஆனால் தூங்குவது போல்
பாசாங்கு செய்பவரை எழுப்ப முடியாது..

அது போல தாயின் தாலாட்டு
கேட்டு தூங்கிய நாம்
நம் குழந்தைகளுக்கு தாலாட்டுக்குப் பதில்
ஒரு  ஒலித்தட்டு  போட்டு தூங்க வைக்கிறோம்..

என்ன கொடுமை..!

======================================================

ARUNESH :

விழிகளுக்கு  தாழிட்டு
விண்மீன்கள் சங்கமித்தாலும்
விடியலை நோக்கும்
இரவின் முதல் முயற்சி தூக்கம்..!

மனிதர்கள் தன் துயரத்தை
மறந்து போகும் இந்த தூக்கத்தை விட
சிறந்த ஒளடதம் வேறில்லை

======================================================

MASALA_MAN :

தூக்கம்" தேடியபோது நீ வரவில்லை....
 நீ என்னை தீண்டியபோது....
நான் உன்னை ஏற்கவில்லை....
"தூக்கம்" நைட் டூட்டியில் நான்

======================================================

KANCHANASUGI :

தினம் தினம் தூங்கினேன்
ஆனால் ஒரு நாள் கூட
அந்த தூக்கம் எனக்கு நிம்மதி தரவில்லை.
நிம்மதி தரும் தூக்கம் என்று வரும் என்று தான் தெரியவில்லை
ஒருவேளை நான் இறக்கும் பொது தான்
நிம்மதியான தூக்கம் கிடைக்குமா ..?

-------------------------------------------------------

தூக்கம் தானே ,கண்ணை மூடினேன்  ஆர்யா வருவான் என்று ஆனால் வந்ததோ ரூல்ஸ் அண்ணா அரவிந்த்சாமி மற்றும் கஜோல் ஜோடி 


======================================================

QUEEN_BEE :

இரவிலே தூக்கம் கூட தொலைத்து உன்னையே நினைக்கிறன்
காத்திருக்கும் உனக்காகவே தினமும் ...

உன்னை காணமல் வருவதில்லை உறக்கம்
இருந்தபோதும் வழுகட்டாயமாக உறங்க செல்கிறேன்
 கனவிலாவது உன்னை காண முடியும் என்பதால் l!!!!!

உன்னை நான் பார்த்த நேரம் என் தூக்கம் போனது தூரம்...!

======================================================

WE_R_FRIENDS :

நீ பேசினால் அது பேச்சு ..!
நீ தூக்கத்தில் விட்டால் அது மூச்சு ..!
ஆமா உனக்கு என்ன ஆச்சு ..!

No comments:

Post a Comment